ஏன் இப்படி துர்நாற்றம் அடிக்கிறது!?
அவர்கள் வந்த நேரம், பொதிகை மலையிலே இயற்கை மகள் இன்பமாக இருக்கிறாள். குற்றால சாரல் இருவரையும் தழுவியது. தந்தை மகனும் ஒட்டிக்கொண்டு அருவியை நோக்கி நடந்தார்கள். தந்தையும் மகனும் குற்றால அருவியிலே குளித்து குதூகலம் அடைந்தனர்.
குற்றால அருவியின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டான் அவன். அருவியின் நீர்த்துளி போல துள்ளித்துள்ளி குதித்துக் கொண்டிருந்தான் கண்ணன்.
இது நாள் வரை மழைக்காலத்தில் குளத்திலும் மற்ற காலத்தில் ஒரு குடம் நீரிலும் குளித்துக் கொண்டிருந்தவன், குற்றாலக் குளுமையிலும் அருவி நீரிலும் ஆனந்தம் அடைந்தான்.
“சீக்கிரமா வா. நம்ம கிளம்பி இருப்போம்; முத்து நாலரை மணிக்கு வந்து விடுவான்” எனக் கூறி கண்ணனை உடைமாற்ற அழைத்து வந்தார் அவனது அப்பா.
தங்குமிடம் செல்வதற்கு தந்தை மகனும் தயாராக இருந்தார்கள். மணி 6 ஆகிவிட்டது தெருவிளக்குகள் தெரிய ஆரம்பித்து விட்டன ஆனால்… இவர்களை அழைத்துச் செல்வதற்காக முத்து இன்னும் வரவில்லை.
குற்றால சாரலிலே இருந்தாலும் மனசுக்குள் கொஞ்சம் புழுக்கம்; சிறிது எரிச்சலோடு அப்பா, முத்து மாமா அவருடைய காரை எடுத்துக் கொண்டு வருவதாக சொன்னிங்க, இவ்வளவு நேரமாக வருகிறார் என்றான் கண்ணன்.
“முத்துட பேசி விட்டேன். ஆட்டோ அனுப்புவதாக சொல்லி இருக்கிறார். இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடும் வா போகலாம். அங்கே அவனுக்கு என்ன பிரச்சனையோ” என்றார் கண்ணனின் அப்பா.
ஒரு வழியா ஆட்டோ வந்து சேர்ந்தது. இருவரும் ஆட்டோவில் முத்துவின் தோப்பு விட்டுக்கு சென்றார்கள்.
“இருட்டுவதற்கு முன்னால் ஆட்டோ வந்திருந்தால் செல்லும் வழியில் மலையையும் பசுமை நிறைந்த மரங்களையும் பார்த்து ரசித்துக் கொண்டே வந்திருக்கலாம். இப்ப பாருங்க, நம்ம ஊரு வேலிக்கருவல் காட்டு பாதையில போவது மாதிரி இருக்கு முழுவதும் இருட்டா, கருப்ப தெரியுது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற பழமொழி தான் ஞாபகத்திற்கு வருகிறது என தனக்குள்ளே பேசிக்கொண்டான் கண்ணன்.
இருவரும் தோப்புக்கு வந்து சேர்ந்தனர். அங்கேயும் முத்துவை காணும். அவரது வேலையாள் மட்டும் தான் இருந்தார்.
“என்ன அண்ணே, ஒரு மாதிரியா இருக்குறீங்க. எதையும் ஆட்டோவில் விட்டுட்டீங்களா” என்று கேட்டார் வேலைக்காரர்.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல. முத்து இன்னும் பார்க்க வரவில்லை… அதான் வேற ஒன்னும் இல்ல. நீங்க குற்றாலம் வந்தவுடன் என் வண்டியோட உங்க கூட இருப்பேன் கவலை வேண்டாம் என்றான் நேற்று. இன்று மதியம் முதல் இங்குதான் இருக்கிறோம். ஆளையே காணோம்” என்றார் கண்ணனின் அப்பா.
“நீங்க ஒன்னும் தவறா நினைக்காதீங்க. முத்து அண்ணன் ஒரு முக்கியமான வேலையாக போய் இருக்காரு. இப்ப வந்துருவாங்க. உங்களுக்கு தேவையான அத்தனை ஏற்பாடுகளையும் இங்கே செஞ்சு வச்சாச்சு. முத்து அண்ணனும் இரவு உங்களோடு தான் சாப்பிடுவதாக சொல்லி இருக்கிறார்” என்றார் வேலைக்காரர்.
“அண்ணே இங்கே என்னென்ன மரங்கள் இருக்கிறது?” என்றான் கண்ணன்.
இங்கு.. மா மரம், பலா மரம், தென்னை மரம், வாழை இது நாலு தான் இந்த தோட்டத்தில் முக்கியமான வருமானம் மற்ற எல்லாம் கொஞ்சம் கொஞ்சம். எல்லாமே இயற்கை விவசாயம் தான்” என வேலைக்காரர் சொன்னார்.
தோப்புக்கு வடக்கு பக்கம் முத்துவின் பங்காளியுடைய இடம். அந்த இடத்தை கேரளாவை சேர்ந்த ஒரு சேட்டன் போன மாசம் வாங்கி விட்டார். அந்த இடத்தில் தான் பிரச்சனையை ஆரம்பமாய் இருக்கிறது.
அந்த இடத்தில் இருந்து இடைவிடாத துர்நாற்றம் வந்து கொண்டே இருக்கிறது. எதனால் துர்நாற்றம் வருகிறது என்று சென்று பார்த்தால் அங்கே மருத்துவக் கழிவுகளையும், கோழிக்கழிவுகளையும், குப்பைகளையும் கொண்டு வந்து கொட்டி வைத்திருக்கிறார்கள். இதை வைத்து இங்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டால் நாங்கள் தரம் பிரிக்கிறோம் என்கிறார்கள். அதில் முற்றிய பிரச்சனை காவல் நிலையம் வரை சென்றது.
முதலில் முத்து காவல் நிலையம் சென்று சேட்டன்கள் மீது புகார் மனு கொடுத்தார். விசாரிப்பதாக சொல்லி அனுப்பினார்கள்.
இப்பொழுது பல நாட்களுக்கு மேலாகி விட்டது, இதுவரை விசாரிக்கவே இல்லை. ஆனால் தினமும் வாகனங்கள் மூலம் குப்பையை ஏற்றி வரப்பட்டு இங்கு கொட்டப்படுகின்றது என அனைத்து பிரச்சினைகளையும் கண்ணனின் அப்பாவிடம் சொன்னார் வேலைக்காரர்.
இரவு 8:30 மணிக்கு முத்து தோட்டத்து வீட்டிற்கு வந்தார். அனைவரும் ஒன்றாக சேர்ந்து இரவு உணவு அருந்தினார்கள்.
“முத்து, இவ்வளவு பிரச்சனை நடந்திருக்கு… ஒரு வார்த்தை கூட சொல்லலையே” எனக் கேட்ட கண்ணனின் அப்பா.
“எல்லாம் சரியாகிவிடும் என இருந்தேன். ஆனால், இங்கே ‘அரண்மனை கோழி முட்டை அம்மிக்கல்லை உடைக்கும்’ கதையாக இருக்கு. திராவிட மாடல் ஆட்சியில் அதிகாரத்தில் இருக்கும் (திராவிட) நபர்கள் சொல்வது தான் சட்டமாக இருக்கிறது.
காவல்துறை அதிகாரியே சொல்கிறார், இது மேலிடத்து உத்தரவு. தமிழகத்தில் இருக்கும் சிறுபான்மை தெலுங்கு, கன்னட, மலையாள மக்களை பாதுகாக்க வேண்டும்… அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதீர்கள் என்று சொல்கிறார்கள்; நாங்கள் என்ன செய்யிறது என்கின்றார்.
“வெளிமாநிலத்தில் இருந்து குப்பைகளை கொண்டு வந்து இங்கே கொட்டுவது சட்டப்படி தவறு… அதை சொல்ல வேண்டியது தானே” என்றார் கண்ணனின் அப்பா.
“காவல் நிலையத்தில் இதைத்தான் நானும் சொன்னேன். அதற்கு அங்கிருந்த நமக்கு வேண்டிய நபர் ஒருவர் சொன்னார் “அண்ணே தமிழ்நாட்டுல இதெல்லாம் திட்டமிட்டு நடக்குது. நேத்து நான் சோதனை சாவடிக்கு தற்காலிக பணியில் இருந்தேன். அப்போது கோழி கழிவுகளை ஏற்றி வந்த வண்டியை நிறுத்தி வைத்தேன். அடுத்த நிமிடமே பெரிய பெரிய இடத்தில் இருந்து எல்லாம் அழைத்து வண்டியை தமிழ்நாட்டுக்குள் விடச் சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் பிற மாநிலத்தில் இருந்து கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவதும், தமிழ்நிலத்து மலைகளை உடைத்து ஏற்றிச் செல்வதும் திட்டமிட்டு ஏதோ செய்கிறார்கள். தமிழர்களாகிய நாம் தான் விழித்துக் கொள்ள வேண்டும் எனச் சொன்னார் அந்தக் காவலர்.
துர்நாற்றம் அடிப்பது இங்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாடே என்று புரிந்து கொண்டேன்.
‘ மக்கள் அரசியலில் இருந்து விலகி நிற்கலாம்… ஆனால் அரசியல் ஒரு நாளும் மக்களை விட்டு விலகி நிற்பதில்லை’ என திரு.சீமான் அவர்கள் இந்த வாசகத்தை அதிக மேற்கோள் காட்டுவார். அவர் சொல்வது உண்மைதான் என இப்பொழுது புரிகிறது.
துர்நாற்றத்தைப் போக்க வேண்டும் என்றால் அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும். நல்ல தமிழன் தமிழ்நாட்டை ஆள வேண்டும்.
அரசியல் சாக்கடை என்று விலகிச் செல்லாமல் இந்த திராவிட சாக்கடையை, அரசியலை தமிழ்நாட்டில் இருந்து அப்புறப்படுத்த நாம் தமிழராக ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.
திரு. க. நாகநாதன்,
naganathanji@gmail.com
செந்தமிழர் பாசறை – ஓமன்.