spot_img

நாம் தமிழர் என்று பாடு!

நாம் பிறந்தது நாம் வளர்ந்தது தமிழ்நாடு! – தமிழா!
நாம் தமிழர் நாம் தமிழர் என்று பாடு!
போம்படி சொல் அயலாட்சியைப் பொழுதோடு! – விரைவில்
போகாவிட்டால் அறிவார் அவர் படும்பாடு!

நாமறிவோம் உலகத்தில்நம் பண்பாடு! – தமிழா
நாம்தமிழர் நம்திறத்துக் கெவர்ஈடு?
தீமை இனிப் பொறுக்காது நம்தமிழ் நாடு! – நாம்
தீர்த்துக் கொண்டோம் அவர் கணக்கை இன்றோடு!

மூவேந்தர் முறை செய்தது நம் தமிழ் நாடு! – தாய்
முலைப்பாலொடு வீரம் உண்டது செந்தமிழ் நாடு!
கோவிலுக்குள் வேண்டாம் பிறர் தலையீடு! – பகை
குறுகுறுத்தால் பொறுக்காதெம் படைவீடு!

நாவலரும் காவலரும் ஆண்டது இந்நாடு! – நிமிர்ந்து
நாம்தமிழர் நாம்தமிழர் என்றுபாடு!
நாவைப்பதா நம் சோற்றில் கோழிப்பேடு? – தமிழா
நாம்தமிழர் நாம்தமிழர் என்று பாடு!

முத்துக்கடல் முரசறையும் முத்தமிழ் நாடு! – நீ
முன்னே்றுவாய் தமிழ் மறவா ஒற்றுமையோடு!
நத்துவதை ஒப்பிடுமா நம்வீடு மறவா?
நாம் தமிழர் நாம் தமிழர் என்று பாடு!

தத்தும் தவளைக் கிடமா முல்லைக்காடு! – நம்
தமிழகத்தில் கால்வைப்பதா இந்திப்பேடு!
நத்தை உறவாடுவதா சிங்கத்தோடு? – தமிழர்
நாம் தமிழர் நாம் தமிழர் என்று பாடு!

– பாவேந்தர் பாரதிதாசன்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles